top of page
Search

கரணம் என்றால் என்ன ? முழு விவரம்

  • jothidam
  • May 17, 2017
  • 1 min read

கரணம் என்பது ஒரு திதியில் பாதியாகும் .ஆறு பாகை கொண்டது ஒரு கரணம் .ஒரு ராசி மண்டலம் பன்னிரண்டு ராசி சேர்ந்து 360 பாகை என்பது உங்களுக்கு தெரியும் .இரண்டு கரணம் சேர்ந்து ஒரு திதி யாகும்

கரணம் மொத்தம் பதினொன்று

1. பவம்

2.பாலவம்

3.கௌலவம் .

4. தைதுளை

5.கரசை

6.வணிசை

7. பத்திரை

8.சகுனி

9.சதுஸ் பாதம்

10.நாகவம்

11.கிம்ஸ்துக்னம்

இவற்றில் அமாவாசை மறு நாள் வரும் பிரதமை திதியின்

பின் பாதியில் பவ கரணம் ஆரம்பிக்கும்

.

துதியை திதிக்கு பாலவ ,கௌலவ கரணம்களும்

திரிதியை திதிக்கு தைதுளை ,கரசை கரணம்களும்

சதுர்த்தி திதியில் வணிசை ,பத்திரை கரணம்களும்

பஞ்சமி திதிக்கு மீண்டும் பவ ,பாலவ கரணம்களும்

இப்படி சுழற்சி முறையில் 7 கரணம்களும் வரும் .

மீதம் உள்ள நான்கு கரணம்களும் சகுனி கரணம் தேய்பிறை சதுர்த்தசி

பிற்பாதியில் வரும்

.

சதுஸ் பாதம் ,நாகவம் ஆகிய கரணம்கள் அமாவாசை

முன்பாதி ,பிற்பாதில் வரும் .

கிம்ஸ்துக்னம் வளர் பிறை பிரதமை பின் பாதியில் வரும் .

இந்த நான்கு கரணமும் இந்த நான்கு இடத்தில் மட்டும் வரும்

.மற்ற 7 லும் மாறி மாறி வரும் .

சுப கரணம் - பவம் ,பாலவம் ,கௌலவம் ,தைதுளை ,கரசை

அசுப கரணம் -வணிசை ,பத்திரை ,சகுனி ,சதுஸ் பாதம் ,நாகவம் ,கிம்ஸ்துக்னம்

என்ன நண்பர்களே இப்பொழுது கரணம் பற்றி முழு விவரம் தெரிந்ததா

இனிமேல் சுப யோக சுப கரணம் என்று சொல்லும் பொழுது அது என்ன கரணம் என்று அறிந்து கொள்ளுங்கள் என்று சொல்லி அனைவருக்கும் மாலை வணக்கம்

 
 
 

Comments


Check back soon
Once posts are published, you’ll see them here.
Recent Posts
Archive
Search By Tags
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
  • Facebook - White Circle
  • Pinterest - White Circle
  • Instagram - White Circle

© 2023 by Jade&Andy. Proudly created with Wix.com

bottom of page