பஞ்சாங்கத்தில் உள்ள நேத்ரம் ,ஜீவன் என்றால் என்ன என்று தெரியுமா !
- jothidam
- Jun 18, 2017
- 1 min read

பஞ்சாங்கத்தில் நேத்ரம் ,ஜீவன் என்று குறிப்பிட்டு இருப்பார்கள் .அவை என்ன ?
ஜீவன் இல்லாத நட்சத்திரத்தில் சுபம் தவிர்க்க வேண்டும் .
அதே போல் நேத்ரம் என்றால் கண்கள் என்று பொருள் .
இரண்டு கண்கள் உள்ள நாட்கள் ,ஒரு கண் உள்ள நாட்கள் மற்றும் குருட்டு நாள் என்று உண்டு .இரண்டு கண் உள்ள நாட்கள் சுபம்.
சூரியன் இருக்கும் நட்சத்திரத்திற்கு முன் பின் உள்ள நட்சத்திரம் ஜீவன் இல்லாத நட்சத்திரங்கள் தவிர்க்க வேண்டும் .
சூரியன் இருக்கும் நட்சத்திரத்திற்கு 3,4,5,6,7,8 முன் பின் உள்ள நட்சத்திரங்கள் அரை ஜீவன் உள்ள நட்சத்திரங்கள் .மத்திம பலன் .
சூரியன் இருக்கும் நட்சத்திரத்திற்கு 9- 13 முன் பின் உள்ள நட்சத்திரங்கள் ஒரு ஜீவன் உள்ள நட்சத்திரங்கள் நன்று .
நேத்திரம் என்றால் கண்கள் .அஸ்வினி முத்தால் அன்றைய நட்சத்திரம் வரை எண்ணி வரும் தொகையை ஒன்பதால் வகுத்து மீதி வந்த எண் 1,2,3,4 என்றால் நேத்திரம் இரண்டு அதாவது இரண்டு கண் உடைய நாள் சுபம் .
5,6,7 வந்தால் ஒரு கண் உடைய நாள் .
8,9,0 வந்தால் குருட்டு நாள் சுபம் தவிர்க்க வேண்டும் .
Commentaires